Enable Javscript for better performance
மேலும் 100 ரயில் நிலையங்களில் அதிவேக வை-ஃபை வசதி நீட்டிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    மேலும் 100 ரயில் நிலையங்களில் அதிவேக வை-ஃபை வசதி நீட்டிப்பு

    By dn  |   Published On : 25th July 2016 01:38 AM  |   Last Updated : 25th July 2016 01:38 AM  |  அ+அ அ-  |  

    railway

    இந்த ஆண்டு இறுதிக்குள் 100 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிவேக வை-ஃபை வசதியைத் தொடக்கி வைத்து, அவர் பேசியதாவது:

    தமிழகத்தில் சென்ட்ரல், திருச்சி ரயில் முனையம் உள்பட நாடு முழுவதும் 19 ரயில் நிலையங்களில் இலவச வை-ஃபை வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்குள் 100 ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018-க்குள் 400 ரயில் நிலையங்களாக உயர்த்தப்படும்.

    தமிழகத்தில் வருகிற டிசம்பருக்குள் மேலும் 3 ரயில் நிலையங்களில் வை-ஃபை வசதி அறிமுகப்படுத்தப்படும்.

    3 ஆண்டுகளுக்குள் பயோ-கழிவறை: இருப்புப் பாதைகள் சேதமடைவதைத் தடுக்கவும், பராமரிப்புச் செலவைக் குறைக்கும் வகையிலும் ரயில்களில் பயோ-கழிவறைகள் ஏற்படுத்தப்படுகின்றன. 2016 மார்ச் வரை 35 ஆயிரம் பயோ-கழிவறைகள் உள்ளன.

    2016-17ஆம் நிதியாணடில் மேலும் 30 ஆயிரம் புதிய பயோ-கழிவறைகள் ஏற்படுத்தப்படும். அடுத்த 3 ஆண்டுகளுக்குள் ரயில்கள் முழுவதும் பயோ-கழிவறைகள் என்ற நிலை எட்டப்படும்.

    2020-க்குள் காத்திருப்போர் பட்டியலை நீக்க இலக்கு: போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததற்கு, ரயில்வேயில் குறைவான நிதி ஒதுக்கீடே காரணம். எனவே, அடுத்த 4 ஆண்டுகளில் ரயில்வே துறையில் ரூ.8.15 லட்சம் கோடி முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், ரயில் பெட்டிகள் அனைத்தும் நவீன மயமாக்கப்படும்.

    2020-க்குள் ரயில் பயணத்துக்காக காத்திருப்போர் பட்டியலே இல்லை என்ற நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    "அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (சி.சி. டி.வி.) பொருத்த வேண்டும்' என விழாவில் பங்கேற்ற எம்.பி.க்கள் பேசினர்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp