டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு: மே 10ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை, மே மாதம் 10-ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
Published on
Updated on
1 min read

சென்னை: டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கின் விசாரணையை, மே மாதம் 10-ஆம் தேதிக்கு எழும்பூர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

அதிமுக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மீது, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், 2 அந்நிய செலாவணி மோசடி வழக்குகள் தொடரப்பட்டு, அவற்றின் விசாரணை நடந்து வருகிறது.

இதற்காக, நேற்று வியாழக்கிழமை தினகரன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், தினகரனை தில்லி போலீஸார் கைது செய்துள்ளதால் அதுதொடர்பான தகவல்களை அவரது வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மே மாதம் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com