இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம்: 'தடாலடி' தங்க தமிழ்ச்செல்வன்!

எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருக்கும் கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று அதிமுக எம்.எல்.வான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:44 pm

DIN

புதுச்சேரி: எங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்திருக்கும் கொறடா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம் என்று அதிமுக எம்.எல்.வான தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் சில நாட்களுக்கு முன்பு இணைந்தன. ஓ.பபன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், அதிமுகவின் வழிகாட்டுக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் போர்க்குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏக்கள் அணி திரண்டனர். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழத்தின் பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்தித்து. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நம்பிக்கை  இல்லை என்றும், முதல்வரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்தனர்.

தற்பொழுது அவர்கள் அனைவரும் புதுச்சேரியினை அடுத்துள்ள சின்ன வீராம்பாளையம் என்னும் இடத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியுள்ளனர். 

இந்நிலையில் அரசின் தலைமைக் கொறடா ராஜேந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேரை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக அதிமுக அம்மா அணி ஆதரவு எம்.எல்.ஏவான தங்க தமிழ்ச்செல்வன் இன்று தாங்கள் தங்கியுள்ள விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

எங்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா பரிந்துரை செய்திருப்பது சட்டவிரோதம். அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம். நாங்கள் அனைவரும் எங்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக சரியான  பாதையில் செல்கிறோம் அவ்வளவுதான். எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. எங்கள் நடவடிக்கையில் எந்த தவறும் இல்லை. 

எங்கள் மீது இன்று நடவடிக்கை எடுக்க நினைப்பவர்கள், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது திமுகவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, கொறடா உத்தரவுக்கு மாறாக அரசுக்கு எதிராக வாக்களித்தவரும், இரட்டை இலை சின்னம் முடக்கப்படுவதற்கு காரணமாக அமைந்தவருமான ஓ,பன்னீர்செல்வத்திற்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?

தற்பொழுது நாங்கள் நினைத்தால் அவரை பதவி நீக்கம் செய்யய முடியும். அவரால் எங்களை எதுவும் செய்ய முடியாது. நாங்கள் எங்கும் ஒளிந்து கொள்ளவில்லை. இது ஜனநாயக நாடு. எங்கள் கடமையைத்தான் நாங்கள் செய்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.