கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல: ப.சிதம்பரம் கருத்து

இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:20 pm

DIN


காரைக்குடி: இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ஜிஎஸ்டி என்பது ஒரே வரி. நாடு முழுவதும் ஒரே வரி என்பதுதான் கொள்கை. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல.

ஒரே வரி இந்தியாவில் இருக்க வேண்டும். அதுதான் ஸ்டேண்டர்ட் வரி. அதனுடன் பிளஸ் ஸ்டேண்டர்ட், மைனஸ் ஸ்டேண்டர்ட் வரி இருக்க வேண்டும் என்பதே திட்டம். 

ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் முதல் விளைவாக பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வரி முறை சிறு குறு வியாபாரிகளைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.