நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல: ப.சிதம்பரம் கருத்து
இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.


காரைக்குடி: இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி வரி அல்ல என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம், ஜிஎஸ்டி என்பது ஒரே வரி. நாடு முழுவதும் ஒரே வரி என்பதுதான் கொள்கை. ஆனால், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது உண்மையான ஜிஎஸ்டி அல்ல.
ஒரே வரி இந்தியாவில் இருக்க வேண்டும். அதுதான் ஸ்டேண்டர்ட் வரி. அதனுடன் பிளஸ் ஸ்டேண்டர்ட், மைனஸ் ஸ்டேண்டர்ட் வரி இருக்க வேண்டும் என்பதே திட்டம்.
ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டியால் முதல் விளைவாக பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வரி முறை சிறு குறு வியாபாரிகளைத்தான் கடுமையாக பாதிக்கும் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...