தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
Updated on
1 min read

2015-2016 மற்றும் 2016-2017 ஆண்டுகளுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் அம்மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது 2016-2017 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகை ஒரிரு நாளில் வழங்கப்படும் என்றும் அதைத்தொடர்ந்து 2015-2016 ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத் தொகையும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

இதன்பின்னரே விவசாயிகள் தங்களது முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com