தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்த முயன்ற ரூ. 5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகே இன்று காலை மத்திய பாகம் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்ததில் 5 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக காரில் இருந்த 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஹெராயினை தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு கடத்திச் செல்ல முயன்றது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 5 கோடி ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.