இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

இனி மின்வெட்டு குறித்து உங்களுக்கு எஸ்.எம்.எஸ் வரும்: அப்டேட் ஆகும் மின் வாரியம்!

இனி உங்கள் பகுதியில் மின்வெட்டு எப்பொழுது என்பது குறித்த தகவல்களை முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் சேவையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

News image
Updated On :12 ஜூன் 2017, 1:25 pm IST

சென்னை: இனி உங்கள் பகுதியில் மின்வெட்டு எப்பொழுது என்பது குறித்த தகவல்களை முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் சேவையை தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அறிமுகப்படுத்த உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இனி உங்கள் பகுதியை மின்வெட்டு குறித்த தகவல்கள் உங்களுக்கு முன் கூட்டியே எஸ்எம்எஸ் மூலம் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும். இதற்காக, மின்சார நண்பன் என்ற சேவையை, மின் பகிர்மான கழகம் தொடங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் படி உங்கள் ஏரியாவில் மின்வெட்டு இருக்கும் என்றால் முன் கூட்டியே எஸ்எம்எஸ் அனுப்பப்படும். முதற்கட்டமாக எங்களிடம்  தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்துள்ள  வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

அத்துடன் விரைவில் வாடிக்கையாளர்கள் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு வசதியாக அலைபேசி செயலியும் அறிமுகபடுத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.