மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டது! 

தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 18 நாட்களுக்கு பின்னர் இன்று முழுமையாக இடிக்கப்பட்டது

News image
Updated On :20 ஜூன் 2017, 11:03 am

DIN

சென்னை: தீ விபத்துக்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டடம் 18 நாட்களுக்கு பின்னர் இன்று முழுமையாக இடிக்கப்பட்டது

சென்னையின் முக்கிய வணிக கேந்திரமான தியாகராய நகரில் அமைந்துள்ளது சென்னை சில்க்ஸ் துணிக்கடை.இத்துடன் குமரன் ஜூவல்லர்ஸ் என்னும் நகைக்கடையும் தரைத்தளத்தில் அமைந்துள்ளது.   

இங்கு கடந்த 31-ஆம் தேதி அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினரின் கடுமையான முயற்சிகளுக்கு பின்னரும் மூன்று நாட்களாக தீயை அணைக்க இயலவில்லை.இந்த தீ விபத்தில் அந்த கட்டடம் முழுமையாக சேதம் அடைந்தது.

பின்னர் சேதமான கட்டடத்தை இடிக்கும் பணி கடந்த 3-ஆம் தேதியன்று தொடங்கியது. முதலில் இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடித்து விடலாமென்று எண்ணித் துவக்கப்பட்ட பணிகள், பல்வேறு தாமதங்களின்  காரணமாக, இத்தனை நாட்களாக நீடித்தது. அத்துடன் அருகில் உள்ள உஸ்மான் சாலை மேம்பாலம் இதன் காரணமாக சேதம் அடையாமல் தவிர்ப்பதும் முக்கியமாக கருதப்பட்டது.

இடையில் இடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஜா கட்டர் எண்ணும் கருவி விழுந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் ஒரு வழியாக கட்டடத்தினை இடிக்கும் பணியானது இன்று முழுமையாக நிறைவடைந்தது. கட்டட அடைப்புகளை அகற்றும் பணி நாளை முதல் துவங்கும் என்றும், மூன்று நாட்களுக்குள் அந்த பணியும் முழுமையாக நிறைவடையும் என்றும் ஒப்பந்ததாரர் பீர் முகமது தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.