இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்!
இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.


சென்னை: இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
சென்னைக்கு தென்மேற்கு மண்டலத்தில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு வளிமண்டல சுழற்சியானது தற்பொழுது அங்கிருந்து மெதுவாக நகர்ந்து இலங்கை கடற்கரைக்கு அருகே நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான தமிழக கடற்கரை பகுதிகளிலும் , சில உள் தமிழகப் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்புள்ளது.
சென்னையினைப் பொறுத்த வரை இன்று மாலை தொடங்கி இரண்டு நாட்களுக்கு விட்டு விட்டு மழை பெய்யும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...