மண் சரிவு: தமிழக - கேரள சாலையில் போக்குவரத்து துண்டிப்பு

உதகையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தமிழக - கேரள சாலையில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
Updated on
1 min read

உதகையில் வியாழக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக தமிழக - கேரள சாலையில் பாறைகள், மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், உதகை, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால், தமிழக - கேரள எல்லைப் பகுதியான கீழ்நாடுகாணி பகுதியில் ராட்சத பாறைகள், மரங்கள் சரிந்து சாலையில் விழுந்தன. இதனால், வாகனங்கள் சாலையைக் கடக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
இதனால், அந்த சாலை மூடப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சாலையில் விழுந்த பாறைகள், மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். 
இதனால், கேரளத்தில் இருந்து உதகை, கர்நாடக மாநிலத்துக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
இதேபோல, கக்குச்சி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com