கொடை ரோடு சுற்று வட்டாரப் பகுதியில் திராட்சை விளைச்சல் அமோகமாக உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள வெள்ளோடு, பெருமாள்கோவில்பட்டி, அமலிநகர், ஜே.ஊத்துப்பட்டி, ஜாதிக்கவுன்டன்பட்டி, செட்டியபட்டி, மெட்டூர், கொடைரோடு, காமலாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் திராட்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையிலும், சிறுலை அடிவாரப் பகுதியில் கிடைக்கும் குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு திராட்சை சாகுபடி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கொடை ரோடு சுற்று வட்டாரப் பகுதிகளில் கொடித் திராட்சை, கருந்திராட்சை, பன்னீர் திராட்சை என 3 வகையான திராட்சை சாகுபடி செய்யப்படுகிறது. இந்நிலையில் சிறுமலை அடிவாரத்தில் திராட்சை சாகுபடி செய்துள்ள தோட்டங்கள், அறுவடைக்கு தயாராகி வருகின்றன. தரமான பழங்களோடு, உற்பத்தியும் விலையும் அதிகரித்துள்ளதால் திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகம் மட்டுமின்றி, கேரளம் மற்றும் ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளும், திண்டுக்கல் பகுதி திராட்சையை வாங்க வரத் தொடங்கியுள்ளனர். இதனால், கடந்த ஆண்டை விட கூடுதல் விலை கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். தற்போதைய நிலையில், கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோசமான வானிலை! உத்தரகண்டில் ராகுல் காந்தி சென்ற ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!
உலகிலேயே அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் 14 இந்திய நகரங்கள்!

பாசில் ஜோசஃப் நடித்த அதிரடி ஓடிடி தேதி!
குஜராத், டாமனுக்கு ரூ. 21,700 கோடி வளர்ச்சித் திட்டங்கள்! தொக்கி வைக்கிறார் பிரதமர் மோடி!
விடியோக்கள்
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan

முக்கிய Hard Disk-கள் திருட்டு! கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! அமைச்சர் நிர்மல் குமார்

இன்னொரு சின்னத்தில் போட்டியிடக் கூடாது! துரை வைகோ உறுதி! | MDMK | DMK



