காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, சென்னை பூங்கா நகர், எழும்பூர் ரயில் நிலையங்களில் மின்சார ரயில்களை நிறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பூங்கா நகர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலை திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் திரண்டனர். அவர்கள் சென்னை கடற்கரை -தாம்பரம், தாம்பரம் -கடற்கரைக்கு செல்லும் மின்சார ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் என்ஜின் மீது ஏறியும், தண்டவாளத்தில் அமர்ந்தும் மத்திய அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்கள் எழுப்பினர்.
இவர்களின் போராட்டம் காரணமாக இரு மார்க்கத்திலும் ரயில் சேவை சுமார் 40 நிமிடம் வரை பாதிக்கப்பட்டது. இதனால் ஆங்காங்கே வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டன. மறியலில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட 300 பேர் கைதாகி மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
திராவிடர் கழகத்தினர்: திராவிடர் கழகம் சார்பில் எழும்பூர் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. தாம்பரம் -சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து திராவிடர் கழகத்தின் சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 80 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
பெண்ணிடம் தகராறு செய்ததாக 5 போ் கைது

வீடுதோறும் சோலார்!

நான்குனேரி - மூலைக்கரைப்பட்டி இடையே போதிய பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



