கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரு பெண்கள் சாவு

கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரு பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 

Updated On :6 ஏப்ரல் 2018, 2:29 am IST

கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரு பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர். 
மேட்டுப்பாளையம், நாடார் காலனி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் திருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நெய் கலந்த அவல், சர்க்கரைக் கலவை பிரசாதமாக வழங்கப்பட்டது. 
இதனை சாப்பிட்ட பக்தர்களுக்கு அடுத்த நாள் காலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதில், நாடார் காலனி பகுதி, மாதையன் லே-அவுட்டில் வசிக்கும் சாவித்ரி (60), அதே பகுதியில் வசிக்கும் லோகநாயகி (65) ஆகிய இருவரும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. 
உடல் உபாதையால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் மருத்துவச் சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர். 
இந்நிலையில், வியாழக்கிழமை இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.