கோயிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இரு பெண்கள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
மேட்டுப்பாளையம், நாடார் காலனி பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் திருவிழா ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கியது. அன்று மாலை அம்மனுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்னர் பக்தர்களுக்கு நெய் கலந்த அவல், சர்க்கரைக் கலவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட பக்தர்களுக்கு அடுத்த நாள் காலை வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர்.
இதில், நாடார் காலனி பகுதி, மாதையன் லே-அவுட்டில் வசிக்கும் சாவித்ரி (60), அதே பகுதியில் வசிக்கும் லோகநாயகி (65) ஆகிய இருவரும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
உடல் உபாதையால் பாதிக்கப்பட்ட இவர்கள் இருவரும் மருத்துவச் சிகிச்சை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி

இன்றைய செய்திகள் ஜூன் 15 - நேரலை!

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


