காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து வியாழக்கிழமை, தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு இடங்களில் போலீஸார் அத்துமீறலில் ஈடுபட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன. நாகப்பட்டினத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் போராட்டக்காரர்களைக் கீழே தள்ளி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதில் மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் யாசர் அராபத் என்ற ஊழியர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








