ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காவிரி போராட்டம்: சென்னையில் 10 ஏம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டங்களில், 10 எம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :5 ஏப்ரல் 2018, 2:58 pm IST


சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் இன்று நடைபெற்ற போராட்டங்களில், 10 எம்எல்ஏக்கள் உட்பட 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.

முக்கிய எதிர்க்கட்சியான திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் இன்று நடத்திய முழு அடைப்புப் போராட்டம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து காவல்துறை தெரிவித்துள்ளதாவது, சென்னையில் 35 இடங்களில் சாலை மறியல், 5 இடங்களில் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் 51 இடங்களில் நடத்தப்பட்ட ரயில் மறியல், சாலை மறியல் போராட்டங்களில் 6000 பேர் கைது செய்யப்பட்டனர்.  அண்ணா சாலையில் நடந்த போராட்டத்தின் போது மு.க. ஸ்டாலின் உட்பட 10 எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

போராட்டக்காரர்களால், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் 10 பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.