இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மற்றொரு வழக்கானது நீதிமன்றத்தில் தொடரப்பட்டு அரசிடம் அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு இவ்வழக்கில் எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டது? இந்த வழக்கில் என்ன மாதிரியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது? என்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுதொடர்பான விபரங்களை தமிழக அரசின் வழக்கறிஞர் திங்கள் மாலை தாக்கல் செய்ய வேண்டுமென்று அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் இந்த வழக்கானது மதியம் விசாரணைக்கு வந்தபோது குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக 884 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் தகுந்த ஆதாரம் இல்லாத காரணத்தால், எப்.ஐ.ஆர் ரத்து செய்யப்பட்டதாக அரசு தெரிவித்தது