முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமைச்சர்கள் வேலுமணி-தங்கமணி தில்லி பயணம்

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர்.

Updated On :26 டிசம்பர் 2018, 1:16 am IST


தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் தில்லியில் மத்திய அமைச்சர்கள் சிலரை புதன்கிழமை சந்தித்துப் பேசுவார்கள் என எதிபார்க்கப்படுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு இதுவரை அளிக்கவில்லை. சுமார் ரூ.2 ஆயிரம் கோடிக்கும் அதிகமான தொகை நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி ஆகியோர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டனர்.
அவர்கள் புதன்கிழமை தில்லியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசுவார்கள் எனத் தெரிகிறது. மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியுடனான சந்திப்பின் போது, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள நிதிகள் குறித்து கோரிக்கை விடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, தமிழக அரசியல் நிலவரங்கள், எதிர்வரும் மக்களவைத் தேர்தல் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.