சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தியதாக போலி ஆவணங்கள் மூலம் ரூ.40 கோடி மோசடி செய்ததாக சென்னையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு மதுரைக் கிளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு அதில் முறைகேடுகள் நிகழாமல் தடுக்க புலனாய்வுப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில் புலனாய்வுக் குழுவினர் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் டிசம்பர் 20 ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சரக்குகள் அனுப்பாமலேயே ரசீதுகள் மற்றும் ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்தது கண்டறியப்பட்டது.
கழிவு இரும்புகள் வாங்கி விற்பது தொடர்பான வணிகத்தில், எந்தவொரு நிறுவனத்தையும் தொடங்காமலேயே போலி ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் மூலமாக ரூ.220 கோடி வரை வர்த்தகம் செய்ததாக கணக்குத் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வணிகத்திற்கு சரக்கு மற்றும் சேவை வரியாக ரூ.40 கோடி செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ளீட்டு வரி செலுத்தியாகக் கூறி, போலி வணிகத்திற்கு செலுத்திய ஜிஎஸ்டி தொகையையும் திரும்பப் பெற்று மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்த மோசடியில் தொடர்புடைய சென்னையைச் சேர்ந்த நீரஜ்குமார் ஓஷா மற்றும் கோயங்கா ஆகியோரை ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாரதிராஜாவுக்கு என்னைப் பிடிக்கும்; என் நடிப்பு பிடிக்காது! ரஜினிகாந்த் பேட்டி

இறுதி அத்தியாயத்தை நோக்கி மகாநதி தொடர்! விரைவில் நிறைவடைகிறது!

சிவகார்த்திகேயனின் சேயோன் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
லஷ்மிகாந்தன் கொலை வழக்கு: முதல் பாடல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


