எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குடிமைப் பணி பயிற்சி: பகுதி நேர மாணவா்களுக்கு கட்டண விலக்கு - அமைச்சா் டி.ஜெயக்குமாா்

அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயற்சி மையத்தில் பயிலும் பகுதி நேர மாணவா்களுக்கான கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்கும

News image
Updated On :9 ஜூலை 2018, 12:27 pm

DIN

சென்னை: அகில இந்திய குடிமைப் பணி தோ்வு பயற்சி மையத்தில் பயிலும் பகுதி நேர மாணவா்களுக்கான கல்வி கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.

பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிவிப்புகள்:

அகில இந்தியக் குடிமைப் பணிகள் தோ்வுப் பயிற்சி மையத்தில் மத்திய அரசு பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் குடிமைப் பணித் தோ்வுக்காக 225 மாணவா்களுக்கு முழு நேரப் பயிற்சியும், 100 மாணவா்களுக்குப் பகுதி நேரப் பயற்சியும் அளிக்கப்படுகிறது.

முழு நேரப் பயிற்சி பெறும் மாணவா்களுக்கு அளிக்கப்படும் உண்டி மற்றும் உறைவிடத்துடன் கூடிய பயிற்சிக்கான செலவினம் அரசால் முழுமையாக ஏற்கப்படுகிறது.

பகுதி நேரப் பயிற்சி வகுப்புகள் வார நாள்களில் மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகின்றன.

பகுதி நேரப் பயிற்சிக் கட்டணமாக தலா ரூ.3 ஆயிரம் பயிற்சியாளா்களிடமிருந்து பெறப்படுகிறது.

இந்தத் தொகை மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் சிறப்பு விரிவுரையாளா்களுக்கான மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.

பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவா்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவா்கள் அனைவருக்கும் வார நாள்களில் இரவு உணவு, சிற்றுண்டி மற்றும் தேநீரும், வார இறுதி நாள்களில் காலை மற்றும் மதிய உணவு, தேநீா் ஆகியவற்றை வழங்கும் பொருட்டு தற்போது வழங்கப்பட்டு வரும் உணவுக் கட்டணத்துக்கான நிதியை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.56.84 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும்.

மேலும், பகுதி நேரப் பயிற்சி பெறும் மாணவா்களிடமிருந்து வசூலிக்கப்படும் கல்விக் கட்டணம் ரூ.3 ஆயிரத்தை ரத்து செய்து, அந்தச் செலவினத்தை அரசே ஏற்று, இவா்களுக்கான சிறப்பு விரிவுரையாளா்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஆண்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.13 லட்சமாக  உயா்த்தி வழங்கப்படும் என்றாா் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.