கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் சிகிச்சைக்கான தொகை அதிகரிப்பு: முதல்வர்

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

News image
Updated On :9 ஜூலை 2018, 8:10 pm

DIN

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:-
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை ரூ.12,000-த்திலிருந்து ரூ.25,000-மாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். 
இதைத்தொடர்ந்து, இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், முன்னாள் 
மேலவை உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக ஜூலை 1 -ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.