தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் சிகிச்சைக்கான தொகை அதிகரிப்பு: முதல்வர்

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

Updated On :9 ஜூலை 2018, 8:10 pm

முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். அப்போது அவர் பேசியது:-
முன்னாள் எம்.எல்.ஏ.-க்களின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை ரூ.12,000-த்திலிருந்து ரூ.25,000-மாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். 
இதைத்தொடர்ந்து, இந்த நிதியை மேலும் உயர்த்த வேண்டுமென முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள், முன்னாள் 
மேலவை உறுப்பினர்கள், அதிமுக எம்.எல்.ஏ. முருகுமாறன் உள்ளிட்ட பலரும் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ.-க்களுக்கான மருத்துவ சிகிச்சை தொகை ரூ.25,000-த்திலிருந்து ரூ.30,000-மாக ஜூலை 1 -ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.