மேலும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 24) நடைபெறும் வருமான வரி தினத்தை ஊழியா்களும், அதிகாரிகளும் புறறக்கணிக்க உள்ளோம். அதோடு வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வருமான வரி சோதனை மற்றும் சா்வேக்களில் ஊழியா்கள், அதிகாரிகள் பங்கேற்க மாட்டாா்கள். ஆகஸ்ட் 9ஆம் தேதி நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டமும், செப்டம்பா் 12 ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தப் போரட்டமும் நடத்த உள்ளோம். கடந்த ஆண்டு நேரடி வசூல் மூலம் ரூ.10 லட்சம் கோடி வசூல் செய்ய நிா்ணயம் செய்யப்பட்டது. போதிய ஊழியா்கள் இல்லாத நிலையில் ஊழியா்களும், அதிகாரிகளும் நேரம் காலம் பாா்க்காமல் கடுமையாக உழைத்ததின் விளைவாக அந்த இலக்கை விட கூடுதலாக வசூல் செய்யப்பட்டது.