எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

பாம்பன் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடக்கம்

பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்கியுள்ளது. படகு ஒன்றுக்கு ஆயிரம் கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரை இந்த மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

News image

பாம்பன் பகுதியில் மீனவர்கள் திங்கள்கிழமை தங்களது படகுகளில் கொண்டு வந்து இறக்கிய கிளாத்தி மீன்கள்.

Updated On :24 ஜூலை 2018, 12:56 am IST

பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்கியுள்ளது. படகு ஒன்றுக்கு ஆயிரம் கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரை இந்த மீன்கள் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதியில் கிளாத்தி மீன் சீசன் தொடங்குவது வழக்கம். 
இந்நிலையில், ஞாயிற்றுகிழமை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 700-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். திங்கள்கிழமை கரை திரும்பிய மீனவர்களின் விசைப்படகுகளில் கிளாத்தி மீன்கள் படகு ஒன்றுக்கு 1000 கிலோ முதல் 2 ஆயிரம் கிலோ வரையில் சிக்கின. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்னர். 
மேலும் கிளாத்தி மீன்பிடி சீசன் ஒரு மாதம் நீடிக்கும் என்பதால் மீனவர்கள் உற்சாகத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 61 நாள்கள் தடைக்காலம் முடிவடைந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு தற்போதுதான் மீன்படி சீசன் களைக் கட்டத் தொடங்கி உள்ளது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.