தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. புதிய துணைவேந்தர் நியமனம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன், சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :2 ஜூன் 2018, 3:02 pm

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தராக முருகேசன், சனிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். 

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக இருந்த செ.மணியனின் பதவிக் காலம் கடந்த 27-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய துணைவேந்தர் நியமனம் குறித்து பரிந்துரை செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக முருகேசன் நியமிக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் புதிய துணைவேந்தரை நியமித்து சனிக்கிழமை உத்தரவிட்டார்.

புதிய துணைவேந்தரான முருகேசன், அண்ணா பல்கலைக்கழகத்தில் 16 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.