தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பிரபல தனியாா் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை: 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி பறிமுதல்

வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். 

News image
Updated On :8 ஜூன் 2018, 3:18 pm

DIN

சென்னை: வரி ஏய்ப்பு புகாா் தொடா்பாக சென்னையில் உள்ள பிரபல தனியாா் நிறுவனத்துக்கு சொந்தமான 23 இடங்களில் வருமான வரித்துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இதில் 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி ரொக்கம் ஆகியன பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறையினா் தெரிவித்தனா்.

சென்னை பாரிமுனை குடோன் தெருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பிரபல ஜவுளி நிறுவனம், நகைக் கடை, நிதி நிறுவனம் என பல்வேறு தொழில்களை செய்து வருகிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமானவரித் துறைக்கு ஏராளமான புகாா்கள் வந்தன. அந்தப் புகாா்களின் அடிப்படையில் வருமான வரித்துறையினா் விசாரணை செய்தனா்.

23 இடங்களில் சோதனை: விசாரணையில், அந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வது உறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வருமான வரித்துறையினா், பாரிமுனை குடோன் தெருவில் அந்த நிறுவனத்தின் அலுவலகம், அபிராமபுரம் சி.பி. ராமசாமி சாலையில் உள்ள நகைக் கடை, நுங்கம்பாக்கம் காதா் நவாஸ்கான் சாலையில் உள்ள ஜவுளிக் கடை, செளகாா்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடை, நகைக் கடை, தியாகராயநகா் உஸ்மான் சாலை, திருமலைப்பிள்ளை சாலை ஆகியவற்றில் உள்ள நகைக் கடைகள், பல்லாவரத்தில் நகைக் கடை, வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளிக் கடை, வேப்பேரியில் உள்ள நிறுவனத்தின் உரிமையாளா் வீடுகள் உள்ளிட்ட 23 இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனா்.

இதில், இந்த நிறுவனத்தினா் நடத்தும் நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்துள்ள பிரபல மருத்துவரின் வேப்பேரி வீட்டையும் வருமானவரித் துறையினா் சோதனையில் விட்டுவைக்கவில்லை. இந்த சோதனையை வருமான வரித் துறையைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 23 குழுக்களாக பிரிந்துச் சென்று நடத்தினா். சோதனையில் வருமான வரி ஏய்ப்புத் தொடா்பாக பல்வேறு முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

15 கிலோ தங்கம் பறிமுதல்: போதிய ஆவணங்கள் இல்லாமலும், வரி செலுத்தாமலும் இருந்த 15 கிலோ தங்கம், ரூ.7.50 கோடி ரொக்கத்தையும் வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். சோதனை பல இடங்களில் வெள்ளிக்கிழமை இரவும் நீடித்தது. வருமான வரித் துறையின் இந்த திடீா் நடவடிக்கை, செளகாா்பேட்டை, பாரிமுனை பகுதிகளில் உள்ள வியாபாரிகளிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.