ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவிகளுக்கு பச்சை கொடி - தேர்தல் ஆணையம்

ஓபிஎஸ், ஈபிஎஸ்-க்கு அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியது.

News image
Updated On :10 ஜூன் 2018, 6:56 am

DIN

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உயிரிழந்த பிறகு, கட்சியின் புதிய பொதுச்செயலாளராக சசிகலா பொதுக்கூட்டத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பிறகு, கட்சியில் பிளவு ஏற்பட கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

அதே சமயம் அதற்கு இணையான அதிகாரம் உள்ள வகையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 புதிய பதவிகளை அறிமுகம் செய்தனர். அதன்படி,  அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கான தீர்மானத்தை இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்காக கட்சி விதிகளில் அவர்கள் திருத்தம் மேற்கொண்டனர். 

இதையடுத்து, கட்சியில் மாற்றப்பட்ட புதிய விதிகளுக்கு ஒப்புதல் பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில், தேர்தல் ஆணையம் அதிமுக-வில மாற்றப்பட்ட புதிய விதிகளுக்கு ஒப்புதல் வழங்கி அனுமதி தந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.