லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எரிபொருள் மீதான வரியை குறைக்கும் நோக்கமில்லை: டி.ஜெயக்குமார் 

எரிபொருள் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :21 மே 2018, 9:25 pm

எரிபொருள் மீது மாநில அரசு விதிக்கும் வாட் வரியை குறைக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.37 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.59 ஆக உயர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் மீது மாநில அரசு, வாட் எனப்படும் மதிப்புக்கூட்டு வரியை விதிக்கிறது. இந்த வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக, அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில அரசுக்குக் கிடைக்கும் வருவாயின் பெரும்பகுதி எரிபொருள் மீதான வாட் வரியிலிருந்தே கிடைக்கிறது. மேலும், டாஸ்மாக் மூலமும் வருவாய் கிடைக்கிறது. பல்வேறு துறைகளின்கீழ் ரூ.77 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. எனவே, எரிபொருள் மீதான வாட் வரியைக் குறைக்கும் நோக்கம் இல்லை என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.