இந்திய கடலோரக் காவல்படை சார்பில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த 14 கடலோரக் காவல்படை வீரர்களுக்கு சென்னையில் இரண்டு வாரகால பயற்சி அளிக்கப்படுகிறது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்குப் பிராந்திய கடலோரக் காவல் படை மூலம், மொசாம்பிக் நாட்டு வீரர்களுக்கு வரும் 16 -ஆம் தேதி வரை கடலோரப் பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் ரோந்து, மீனவர்கள் பாதுகாப்பு, கடற்கொள்ளை, கப்பல்களைக் கடத்துவதைத் தடுப்பது போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் மொசாம்பிக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
இதற்காக மொசாம்பிக்கில் இருந்து கடலோர காவல்படை அதிகாரிகள் 7 பேரும், காவலர்கள் 7 பேரும் சென்னை வந்துள்ளனர். அவர்களுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை முறைப்படி தொடங்குகிறது. இப்பயிற்சியை இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய கமான்டண்ட் ஐ.ஜி. பரமேஷ்வர் தொடங்கி வைக்கிறார்.
இதேபோன்று, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வியட்நாம் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு இந்தியா சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தனுஷ் - 55 படத்தின் முக்கிய அறிவிப்பு!

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட வேதாந்தாவின் 4 புதிய நிறுவனங்கள்!

இந்தியா - ஸ்லோவாக்கியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்!

சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி!
விடியோக்கள்

டாஸ்மாக் கடையை அகற்றுங்கள்: கிராம மக்கள் எதிர்ப்பு | TASMAC |

ஜூன் 18-ல் கண்டன ஆர்ப்பாட்டம்: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு | Nainar Nagendran |

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK


