திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்! தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

தினமணி இணையதள ரங்கோலி போட்டி: வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசு

தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image

தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்றவர்கள். (உள்படம்) ரங்கோலி.

Updated On :17 ஜனவரி 2018, 10:55 pm

DIN

தினமணி இணையதளம் சார்பில் நடைபெற்ற 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டியில் வெற்றி பெற்ற 10 பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி இணையதளம் (www.dinamani.com), ஐநாக்ஸ் திரையரங்குடன் இணைந்து 'பொங்கலோ பொங்கல்' ரங்கோலி போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டது. இணையதள வாசகர்களுடன் நேரடி சந்திப்புக்காக பொங்கல் பண்டிகையை யொட்டி இந்த ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது. 
இது தொடர்பாக அறிவிப்பு இணையதளத்திலும், தினமணி நாளிதழிலும் வெளியானது. இந்த அறிவிப்புக்கு வாசகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வாசகர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டனர். இதில், 10 பெண்கள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இறுதிச்சுற்று போட்டி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஐநாக்ஸ் திரையங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற 10 பேரும் வண்ணமயமான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்தினர். சிறப்பு விருந்தினராகக் க்ரயான்ஸ் விளம்பர நிறுவனத்தின் தென் பிராந்தியத் தலைவர் விஜய்ஸ்ரீ கிருஷ்ணன் கலந்து கொண்டார். அவர் நடுவராக இருந்து, 5 வெற்றியாளர்களை தேர்வு செய்தார்.
முதல் பரிசை வனஜா ராதா கிருஷ்ணன் தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசை அனுராதா கமலக்கண்ணன் வென்றார். அவருக்கு ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசை ஷாலினி பெற்றார். அவருக்கு ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
4-ஆவது, 5- ஆவது பரிசை முறையே ரெமா ரமணி மற்றும் சந்திரா ரங்கராஜ் பெற்றனர். அவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட்டது. மற்ற போட்டியாளர்களான குணசெல்வி, மாலா, விஜயலட்சுமி, வள்ளி அம்மாள், வித்யா ஆகியோருக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன. ரொக்கப் பரிசுகளுடன் தினமணி இணையதளத்தின் பிரத்யேகக் குடைகளும், ஐநாக்ஸ் நிறுவனம் வழங்கிய திரைப்பட டிக்கெட்டுகளும், சென்னை டயமண்ட்ஸ் நிறுவனம் வழங்கிய தள்ளுபடி கூப்பனும் வழங்கப்பட்டன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.