கடந்த சில மாதங்களாக குடிக்கவே தண்ணீர் இல்லாமல் வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த தமிழகம் சற்று ஆறுதல் அடையும் நிலை உருவாகியிருக்கிறது. ஓரிரு நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும் பட்சத்தில் திறந்துவிடப்படும் அதிகப்படியான தண்ணீரை கடலில் கலக்காமல் சேமித்து வைக்க தமிழக அரசிடம் என்னென்ன திட்டங்கள் இருக்கிறது என்பதை தமிழக மக்களுக்கு சொல்ல வேண்டும். கடந்த வருடம் 500 டிஎம்சி தண்ணீருக்கும் மேலாக கடலில் வீணாக கலக்க விட்டுவிட்டு மீண்டும் தண்ணீருக்காக அண்டை மாநிலங்களிடத்தில் கையேந்தி நின்றது போல இந்த முறையும் செய்ய போகிறோமா என்பதை தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும்.