92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளார்.

News image

கோப்புப்படம்

Updated On :19 ஆகஸ்ட் 2019, 9:12 am

DIN


சென்னை: அடுத்த 3 மாதங்களில் அனைத்து வகையான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இன்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டடங்களிலும் அடுத்த 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

வீடுகள், தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் என அனைத்து விதமான கட்டடங்களிலும் மழை நீர் சேகரிப்பை அமைக்க வலியுறுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி.

தொழில் நிறுவனங்கள், தங்கள் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு மையத்தை அமைக்க 6 மாத காலம் அவகாசம் கேட்ட நிலையில், தமிழக அரசு 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.