கீழடி அகழாய்வில் மழைநீர் செல்லும் வடிகால் கண்டுபிடிப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுவர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால்.
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட வடிகால்.
Updated on
1 min read


சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் மழைநீர் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த வடிகால் சுவர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
கீழடியில் 2015-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதனைப் பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. 
இதையடுத்து, தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ஆம் கட்ட அகழாய்வைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை தோண்டப்பட்ட 30 குழிகளில் 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,  நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து  வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தது தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com