நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அதிமுக கூட்டணிக்கு எதிர்ப்பு: பாமகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் 

அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 2:54 pm

கோவை: அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகரும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவருமான ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

தமிழ் திரைப்படங்களில் நாயகனாக நடித்த ரஞ்சித் ஓராண்டுக்கு முன்பு பாமகவில் இணைந்தார். அவருக்கு உடனேயே மாநில துணைத்தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது    

இந்நிலையில் அதிமுகவுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஞ்சித் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியதாவது:

கடந்த வாரம் வரை முதல்வருக்கு எதிராக பேசிவிட்டு, தற்போது அவர்களோடு கூட்டணி வைப்பது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கூட்டணி தொடர்பாக பா.ம.க. தலைமை தொண்டர்களிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை,  ஆனால் தொண்டர்களை சந்தித்துதான் கூட்டணி அமைக்கப்பட்டது என அன்புமணி கூறியதாய் எண்ணி சிரிப்புதான் வருகிறது.

அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்களை கூறிவிட்டு இப்பொது எப்படி அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்கலாம்?

மதுவுக்கு எதிராக தீவிரமாகப் போராடி விட்டு மதுக்கடைகளை நடத்துவோரிடம் கூட்டணி வைப்பது என்பது ஏற்க கூடியது கிடையாது.

இளைஞர்கள், பொதுமக்களை எல்லாம் நொடிப்பொழுதில் பா.ம.க. ஏமாற்றி விட்டது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.