பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்தது வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் கலக்கத்தை
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
Published on
Updated on
1 min read


பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்தது வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் மட்டுமின்றி சாமானிய மக்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் மூலம் எரிபொருள் விலையை தினந்தோறும் மாற்றியமைக்கும் நடைமுறை கடந்த சில மாதங்களுக்கு முன் கொண்டு வரப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் அதன் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்ந்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சென்னை, மும்பை, தில்லி, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.87-க்கும் மேல் அதிகரித்தது. டீசலும் ரூ.80-ஐ எட்டியது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் மீதான வரியை ரூ.2.50 வரை குறைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து குறைந்தது. கடந்த இரண்டரை மாதங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் ரூ.14.54-ம், டீசல் விலை லிட்டருக்கு சுமார் ரூ. 13.53-ம் குறைந்தது. 

இறங்கு முகத்தில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை, சில நாட்களில் சிறதளவில் மாற்றங்களை கண்டு வந்தது. இப்போது, மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 9 காசுகள் அதிகரித்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் அதிகரித்து ரூ. 70.72 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன 

இறங்கு முகத்தில் இருந்து வந்த பெட்ரோல், டீசல் விலை மீண்டும் தொடர்ந்து ஏறுமுகத்தில் செல்வது வாகன ஓட்டிகள் மற்றும் சாமானிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com