6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை: காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு 

போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  காவல்துறைக்கு மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2019, 12:32 pm

DIN

சென்னை: போலீசார் திட்டியதால் கால் டாக்சி ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு  காவல்துறைக்கு மாநில  மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை ராமாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ், கால் டாக்சி டிரைவர். இவர் வியாழனன்று ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் வெளியிட்ட விடியோ ஒன்றில், போக்குவரத்து போலீசார் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், தனது மரணத்திற்கு சென்னை காவல்துறையினர்தான் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்

இதற்கிடையே ராஜேஷின் விடியோ தொடர்பாகவும், அவதூறாக பேசிய காவலர் யார் என்பது குறித்தும் குறித்தும் விசாரிக்க சென்னை காவல்துறை இணை ஆணையர் விஜயகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கால் டாக்சி ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து இதுகுறித்து விசாரணை நடத்துவது என்று முடிவு செய்துள்ளோம்.

எனவே இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.