நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக அறிகிறோம். அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் பெரும்பாலான ஊழியர்கள் அரசியல் சார்ந்த தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள் நேரடியான அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அண்ணா தொழிற்சங்க பேரவையை சார்ந்த ஊழியர்கள் பெரும்பாலும் இந்தப்பணிகளில் ஈடுபடுத்த முயற்சிகள் மேறகொள்ளப்பட்டு வருகிறது. இவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வெளிப்படையான, நியாயமான தேர்தல் நடத்துவதுதை கேள்விக்குறியாக்கும். எனவே, நேர்மையான, நியாயமான தேர்தல் நடத்துவதை உத்திரவாதம் செய்யும் வகையில் போக்குவரத்து ஊழியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.