தமிழ்நாடு
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கைத் தேவை
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு- தடியடியை குறும்படம் தயாரித்து வெளியிட்ட சமூக ஆர்வலர் முகிலன் கதி என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை. எனவே, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, ஒவ்வொருவரின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.