கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால் தமிழகத்தில் பாஜகவுக்குப் பின்னடைவு

தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால்தான் தமிழகம், புதுச்சேரியில் பாஜக-வுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

News image
Updated On :27 மே 2019, 4:35 am IST

தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால்தான் தமிழகம், புதுச்சேரியில் பாஜக-வுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. 
இதுபோல தென் மாநிலங்களைப் புறக்கணித்த காரணத்தால்தான் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. அதே நேரம், வடமாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து கட்சி மேலிடம் அலசி ஆராயும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தபோதும், மக்கள் மத்தியில் காங்கிரஸின் பிரசாரம் எடுபடவில்லை. பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிய சில காலங்களாகும் என்றார் அவர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.