தென் மாநிலங்களைப் புறக்கணித்ததால்தான் தமிழகம், புதுச்சேரியில் பாஜக-வுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
இதுதொடர்பாக சென்னை விமானநிலையத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:
பாஜக ஆட்சியில் தென் மாநிலங்களுக்கு எந்தவொரு மக்கள் நலத் திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை. விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.
இதுபோல தென் மாநிலங்களைப் புறக்கணித்த காரணத்தால்தான் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. அதே நேரம், வடமாநிலங்களில் அவர்கள் வெற்றி பெற்றிருப்பது பாஜகவினருக்கே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது குறித்து கட்சி மேலிடம் அலசி ஆராயும். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை சிறப்பாக இருந்தபோதும், மக்கள் மத்தியில் காங்கிரஸின் பிரசாரம் எடுபடவில்லை. பின்னடைவுக்கான காரணங்களைக் கண்டறிய சில காலங்களாகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தில்லைவிளாகம் ஸ்ரீவீரகோதண்டராமா் கோயில் கும்பாபிஷேகம்

முத்துமாரியம்மன் கோயிலில் மகா சண்டி யாகம்
இன்றைய மின்தடை - வேதாரண்யம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



