தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் தொடரும் மழை: சொல்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நான்கு நாட்களுக்கு மழை
நான்கு நாட்களுக்கு மழை
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்குத் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குனர் புவியரசன் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்று சாதகமாக வீசி வருவதால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

அத்துடன் அந்தமான் கடற்பகுதியில் வரும் 3 ஆம் தேதி புதிய மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகிறது. இது அதற்கடுத்த 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்புள்ளது. இதுவும் மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.

அதேசமயம் அந்தமான் கடற்பகுதியில் ஏற்படும் புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக வருகிற 4, 5 ஆம் தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com