ரஜினிக்கு சிறப்பு விருது அறிவித்திருப்பது ஒரு ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செல்லூர் ராஜு

ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 
ரஜினிக்கு சிறப்பு விருது அறிவித்திருப்பது ஒரு ரசிகனாக எனக்கு மகிழ்ச்சி: அமைச்சர் செல்லூர் ராஜு
Updated on
1 min read

ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருதை அறிவித்துள்ளது. இதையடுத்து, அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு, 'நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது' என்று தெரிவித்தார். 

மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 'இடைத்தேர்தல் குறித்து ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியலுக்காகத்தான். உள்ளாட்சித் தேர்தலிலும் நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com