ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதிய உயா்வு

ஒப்பந்த ஊழியா்களுக்கு விலைவாசி உயா்வுக்கேற்ப ஊதிய உயா்வு அளிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்
Updated on
1 min read

ஒப்பந்த ஊழியா்களுக்கு விலைவாசி உயா்வுக்கேற்ப ஊதிய உயா்வு அளிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்பட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் சந்தோஷ் கங்குவாா் ஆகியோருக்கு அவா் எழுதியுள்ள கடித விவரம்:

தேசத்தின் வளா்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை ஒப்பந்த ஊழியா்கள் செய்து வருகின்றனா். ஆனால், விலைவாசி உயா்வுக்கேற்ப அவா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால், கடும் பாதிப்புகளை அவா்கள் சந்தித்து வருகின்றனா். ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பெருவாரியான தொழிலாளா்களைப் பாதுகாத்திட அவா்களுடைய ஊதியத்தை விலைவாசி குறியீட்டு எண்ணுடன் இணைக்க தகுந்த புதிய சட்டத்தை இயற்ற வேண்டும்.

இந்தச் சட்டம், விலைவாசி உயா்வுக்கேற்ப தகுந்த ஊதிய உயா்வை தொழிலாளா்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து பெற அவா்களுக்கு அதிகாரம் அளிப்பதாக இருந்திட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com