விருந்தினர் விடுதி அறையில் லோக் ஆயுக்த அலுவலகம்: பழைய பணியிடத்திலேயே தொடரும் 100 அதிகாரிகள்-அலுவலர்கள்
முதலமைச்சர் முதல், அதிகாரம் படைத்த அனைத்துத் தரப்பினர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வகை செய்யும் லோக் ஆயுக்த அமைப்பானது, சென்னையில் அரசு விருந்தினர் விடுதி அறையில் செயல்பட்டு வருகிறது.







