கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:04 am

DIN

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவராக ஓ.ராஜா செயல்பட உயர்நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. 

தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா செயல்பட்டு வந்தார். இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அமாவாசை என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த வழக்கில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஓ.ராஜா மற்றும் 16 பேர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக செயல்பட துணை முதல்வர் பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. அத்துடன் தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் நிர்வாகக்குழுவும் செயல்பட இடைக்கால தடை விதித்துள்ளது. 

மேலும் பால் உற்பத்தி மேல்நிலை பதிவாளர் உள்ளிட்ட 17 பேர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கின் விசாரணையை வருகின்ற 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.