

அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனம் ஆகஸ்ட்16-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் தரிசனம் செய்ய பக்தர்கள் கோயிலுக்கு குவிந்து வருகின்றனர். இதனால். ஏற்படும் நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்படுகின்றன.
இந்நிலையில் அத்திவரதரை பலர் இன்னும் தரிசிக்காத காரணத்தால் உற்சவத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.