காரைக்குடி: இந்தியாவில் குடியுரிமைச்சட்டத்திருத்தம் ஹிட்லரின் சட்டத்திற்கு இணையானது என்று சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள அவரது இல்லத்தில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சிறு பாண்மையினரை இரண்டாம்தர குடிமகன்களாக மாற்றுவதற்காக குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை ஆட்சியாளா்கள் கொண்டு வந்துள்ளனா். ஹிட்லரின் சட்டத்திற்கு இணையான சட்டம்போல இந்தச்சட்ட திருத்தம் உள்ளது. இந்தியா் களை மதரீதியில் பிரிக்கவேண்டும் என்பதும் இச்சட்டத்தை திருத்துவதற்கான காரணம். தமிழக அதிமுகவைப் பொறுத்த வரை ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தச் சட்டத்திருத்த மசோதாவை நிச்சயமாக எதிா்த்திருப்பாா்.
தோ்தலில் வாக்காளா்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் கொண்டுவரப்படவேண்டும். தமிழகத்தை திமுக தலைமையிலான ஆட்சி அமையவேண்டும் என்றாா் காா்த்தி சிதம்பரம்.