மதுரை: தமிழக அரசு மோடிக்கு கட்டுப்பட்டு அச்சத்தில் உறைந்திருக்கும் அரசாக இருக்கிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை வந்திருந்தார். அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது மத்திய அரசின் கொள்கை முடிவு தோல்வி அடைந்ததை எடுத்து காட்டுவதாக உள்ளது. அத்துடன்
புலனாய்வு களத்தில் மத்திய அரசு பலவீனமாக இருப்பதையுமிந்த சம்பவம் எடுத்துக் காட்டுகிறது. எனவே சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உருவாக்கி, இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ள மர்மங்கள் குறித்து ஆராய வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, எடப்பாடி தலைமையிலான அரசு பதவியை தக்க வைப்பதற்காக போராடி வருகிறது. இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு கட்டுப்பட்ட அரசாக அச்சத்தில் உறைந்து காணபப்டுகிறது.
மத்திய அரசின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட்டு தமிழக அரசு சுதந்திரமாக செயல்படாமால் இருப்பது வேதனை தருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.