
உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.
விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் நேற்று இரவு கைது செய்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள மண்டபத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள விவசாயிகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
அப்போது உயர்மின் கோபுரம் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பப்படும் என அவர் உறுதியளித்தார்.