சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்: கமல்ஹாசன்

சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருவகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருகின்றனர்: கமல்ஹாசன்
Updated on
1 min read

சபரிமலை விவகாரத்தில் வலதுசாரிகள் கலவரத்தை உருவாக்கி வருவகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை விமான நிலையித்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நடிப்பு என்பது தொழில், அரசியல் என்பது எனது விருப்பம், இரண்டையும் இணைக்க விரும்பவில்லை. இனிமேல் படத்தில் மட்டும் தான் அரசியல் கருத்து கூறவேண்டும் என்று எனக்கு அவசியம் இல்லை. வெளியில் வந்தும் சொல்வேன். 

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் நல்லதுதான். சபரிமலையில் வலதுசாரிகள்தான் கலவரத்தை உருவாக்குகிறார்கள். திருவாரூரில் இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நிலைபாடு குறித்து நாளை அல்லது நாளை மறுநாள் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். 

ரஜினி, கமல் என யார் கூட்டணிக்கு வந்தாலும் சேர்த்துக்கொள்வோம் என்பது பிரதமரின் நிலைபாடு. வருவோமா என்பது எங்கள் நிலைபாடு. இதுகுறித்து ஆசோசித்து சொல்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com