பழையகோட்டை மாட்டுச் சந்தையில் சாதனை: ரூ. 2 லட்சத்துக்கு காங்கேயம் இனப் பசு விற்பனை

காங்கயம் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், இதுவரை இல்லாத அளவாக ரூ. 2 லட்சத்துக்கு காங்கேயம் இனப் பசு விற்பனையானது.
பழையகோட்டை மாட்டுச் சந்தையில் சாதனை: ரூ. 2 லட்சத்துக்கு காங்கேயம் இனப் பசு விற்பனை

காங்கயம் அருகே பழையகோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாட்டுச் சந்தையில், இதுவரை இல்லாத அளவாக ரூ. 2 லட்சத்துக்கு காங்கேயம் இனப் பசு விற்பனையானது.
 திருப்பூர் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், நத்தக்காடையூர் அருகிலுள்ள பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தையில் காங்கேயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகின்றன.
 கடந்த இரண்டரை வருடங்களாக நடைபெற்று வரும் இந்தச் சந்தையில், வாரந்தோறும் 150 முதல் 200 எண்ணிக்கை வரை காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படும். இதில், சராசரியாக சுமார் 80 மாடுகள் விற்பனையாகும்.
 காங்கேயம் இன நாட்டுப் பசுவின் பால் சத்து நிறைந்தது என்பதால், பழையகோட்டை மாட்டுச் சந்தையில் இன்றுவரை பசு மாடுகள் அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றன. ஒவ்வொரு வாரமும் அதிக விலைக்கு விற்கப்படும் பசுவின் விலை ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருக்கும்.
 இந்நிலையில், பழையகோட்டையில் இந்த வாரச்சந்தையில், சினையுடன் கூடிய காங்கேயம் இன செவலைப் பசு ஒன்று ரூ. 1 லட்சத்துக்கு 98 ஆயிரத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
 சுமார் 125 வாரங்களாக நடைபெற்று வரும் இந்தச் சந்தையில், இதுவரை இல்லாத அளவுக்கு சுமார் ரூ. 2 லட்சம் விலையை எட்டிப் பிடித்த காங்கேயம் இன மாடு இதுதான் என சந்தை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 150 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் 65 மாடுகள் மொத்தம் ரூ. 32 லட்சத்துக்கு விற்பனையாயின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com