
அரியலூர்: திமுக சார்பில் 1998ஆம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சிவசுப்ரமணியம் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம், திமுக தலைவர் கருணாநிதியின் நண்பராவார்.
1989ம் ஆண்டில் ஆண்டிமடம் பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்த சிவசுப்ரமணியத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆண்டிமடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சிவசுப்ரமணியத்தின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.