Enable Javscript for better performance
சிலைக் கடத்தல்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மீண்டும் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    சிலைக் கடத்தல்: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா மீண்டும் கைது

    By DIN  |   Published On : 22nd March 2019 11:06 AM  |   Last Updated : 22nd March 2019 11:06 AM  |  அ+அ அ-  |  

    statue_smuggling


    சென்னை: சிலை கடத்தலில் தொடர்புடைய துணைக் காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர் பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கும் காதர் பாஷா, கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை ஏப்ரல் 4ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    சம்பவத்தின் பின்னணி
    அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆளடிப்பட்டி கிராமத்தில் அரோக்கியராஜ் என்பவரின் வீட்டில் அஸ்திவாரம் அமைக்கும் பணியின்போது 6 சிலைகள் கிடைத்துள்ளன. இதைக் கைப்பற்றிய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கள் காதர் பாஷா , சுப்புராஜ் ஆகியோர் சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தீனதயாளனின் உதவியோடு, சிலைகளை விற்று பணத்தை எடுத்துக் கொண்டனர். 

    இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், சிலையை கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான டிஎஸ்பி காதர் பாஷா, கடந்த 2017ம் ஆண்டு கும்பகோணத்தில் கைது செய்யப்பட்டார். இதனால், 2017ம் ஆண்டு ஜூன் 29 -ஆம் தேதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதற்கிடையே சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு பொன். மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பிறகு, ஏராளமான சிலைகள் கண்டெடுக்கப்பட்டு, குற்றவாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டனர்.

    இந்த நிலையில், நெல்லையில் பழம்பெரும் கோயில் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காதர் பாஷாவுக்கு தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp